Thursday, October 11, 2012

விநாயகர் சதுர்த்தி

மும்பையின் முக்கியமான திருவிழா விநாயகர் சதுர்த்தி

  விநாயகர் சதுர்த்தி மும்பையில் மிகவும் சிறப்பாகவும் செம்மையாகவும் கொண்டாடப்படும்.  பார்ப்பதற்கு  மிகவும்   மகிழ்ச்சியாகவும் வண்ணமயமாகவும் இருக்கும். ஆமாம் தெருக்களில் இருபுறங்களிலும் வண்ணவண்ண மின்விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்டு இருக்கும். 




       வீடுகளிலும், தெருக்களிலும் கணபதியின் சிலைகள் வைக்கப்பட்டு இருக்கும். அதற்க்கு விநாயகர்  சதுர்த்தி  அன்று  (மோதகம் ) கொழுக்கட்டை செய்து , பழங்கள் எல்லாம் வைத்து பூஜை செய்வார்கள். அன்றிலிருந்து   பூஜைகள்   ஒவ்வொரு  நாளும்   கொண்டாடப்படும்  
( பதினொன்று நாட்கள் நடக்கும் ).



      பின்னர் அவரவர்  வழக்கப்படி ஒன்றரை நாள், மூன்றாம் நாள், ஐந்தாம் நாள், ... பதினொன்றாம் நாள்  என்று விநாயகர் சிலைகளை  எடுத்துகொண்டு போகும் பொழுது பாட்டு பாடி,  தெருக்களில் குத்தாட்டம் போட்டுக்கொண்டு சென்று கடலில் , அல்லது செயற்கை குளங்களில் கரைப்பார்கள். அப்பொழுது சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை ஆட்டம் போட்டு கொண்டும் " கணபதி பாப்பா - மோரியா , மங்கள்மூர்த்தி - மோரியா " என்று கூறிக்கொண்டும் சென்று வருவார்கள்.




     நமக்கு பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும். தினமும் மக்கள் அனைவரும் ஒவ்வொரு கணபதியையும் சென்று தரிசித்து வருவார்கள். மிக நன்றாக  இருக்கும் .



 ஆமாம்  மும்பையில் பதினோரு நாட்கள் திருவிழாக் கோலமாக மிகவும் சிறப்பாகவும் அனைவராலும் வரவேற்க்ககூடிய திருவிழா விநாயகர் சதுர்த்திதான். இதனை சியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வரவேற்று காற்று இருக்கும் விழா... 











  இந்தமுறையும் வெகு சிறப்பாக நடைப்பெற்றது...... அடுத்தது வரவேற்க கூடிய விழா நவராத்திரி இதுவும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.....

Wednesday, September 5, 2012

உருளைக்கிழங்கு பொடி மாஸ் - POTATO PODIMAS



தேவையான பொருட்கள்:

உருளைகிழங்கு  - 150 கிராம் 
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2

சோம்பு - 1/2 ஸ்பூன் 
கடுகு - 1/2 ஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன் 
கருவேப்பிலை - சிறிது 
எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 


செய்முறை: 

உருளைக்கிழங்கை தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுக்கவும்.  தோல் நீக்கி நன்றாக பிசைந்து வைக்கவும். 

வெங்காயம்,பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிகொள்ளவும். சோம்பு நன்றாக நுனிக்கிகொள்ளவும்.




 கடாயில் எண்ணெய் விட்டு சூடான பின் கடுகு, உளுத்தம் பருப்பு, தட்டி வைத்துள்ள சோம்பு போட்டு பொரிந்த பின் கருவேப்பிலை சேர்க்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி விடவும்.  பின்னர்  வேகவைத்து பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக பிரட்டி விடவும். 

அடுப்பை மிதமான சூட்டி வைத்து சிறிது நேரம் பிரட்டி விட்டு இறக்கிவிடவும். உருளைக்கிழங்கு  பொடி மாஸ் ரெடி



குறிப்பு: உருளைக்கிழங்கை தோல் நீக்கியும்  வேகவிடலாம், அப்படியே வெந்தபின்னும் தோழுரிக்கலாம் .


மருத்தவ பயன்கள்:

  • உருளைக்கிழங்கு இரத்த அழுத்தத்தை குறைக்கும்.  உடல் எடையையும் குறைக்கும். ( சமநிலையில் வைக்கும் )  .

  • நன்மைபயக்கும் பாக்டீரியாக்களை நம் உடலில் அதிகமாக்கும் தன்மை கொண்டது. அதனால் எளிதில் ஜீரணமாகும். உருழைக்கிழங்கு நமக்கு பல வகையில் நல்லது.

  • குறிப்பாக உருளைக்கிழங்கை எண்ணெயில்லாமல் ( குறைவான எண்ணெயில் )  உபயோகிப்பது நல்லது.

 


Sunday, August 5, 2012

இரண்டாவது விருது - SECOND AWARD

           
             இரண்டுமுறை கிடைத்த விருது ( 31. 07.2012 ) . இரண்டு  உறவினர்களால் ஒரே விருது  எனக்கு கிடைத்தது  .  நான்  அதை மகிழ்ச்சியுடன்  இங்கு பதிவிடுக்கிறேன்.  எனக்கு கிடைத்த  இரண்டாவது  விருது   Sunshine Blogger Award . நான் மிகவும்  மகிழ்ச்சியாக   இருக்கிறேன்  . 




               ஐயா திரு.வை.கோபாலகிருஷ்ணன்  அவர்களால்  எனக்கு  கிடைத்த  இந்த விருதால் மிக்க மகிழ்ச்சியுடன்   ஐயா அவர்களுக்கு நான்  என்னுடைய  நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  

 http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html

         ஐயா அவர்கள் எனக்கும் மற்றும் 107 உறவினர்களுக்கும் இவ்விருதை 
வழங்கியுள்ளது பெருமை  மிக்கது .  அவர்கள் அனைவருக்கும்  என்னுடைய வாழ்த்துக்கள் . மறுபடியும்  அனைவரின் சார்பாக  VGK  ஐயா  அவர்களுக்கு  நன்றியினை  தெரிவிக்கின்றேன். 










         


மறுபடியும்  அதே  விருது  இன்னொரு  உறவினரால்  எனக்கு  கிடைத்தது  இன்னும்  மகிழ்ச்சி .  ஒரேவிருது  இரண்டு  நபர்கள்  எனக்கு  இந்த  விருதை  வழங்கி  என்னை இன்னும்  உற்சாகத்தை  ஏற்படுத்திவிட்டனர்.  இவர்களின்  ஊக்கத்தினால்  நான்  மேலும்  உற்சாகத்துடன் பதிவுகளை  எழுதுவேன் .  உங்களின்  ஆதரவோடு . 





      இந்த  விருதை   எனக்கு  வழங்கியவர்  திருமதி .  ஆர். புனிதா அக்கா அவர்கள்.  அவர்களுக்கும்   என்னுடைய  மகிழ்ச்சிகரமான  நன்றியினை  தெரிவித்துக்கொள்கிறேன். 

http://southindiafoodrecipes.blogspot.in/2012/07/minced-chicken-keema-paratha.html

தங்கள் இருவருக்கும் நன்றி  தெரிவிக்கும்  வண்ணம்  என்வீட்டு தோட்டத்தி  பூத்த   மலர்கொத்து  நான்  உங்களுக்கு வழங்குகிறேன் நன்றியுடன்.







அனைவருக்கும் என்னுடைய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.




நான் உங்களுக்காக இனிப்பு வழங்குகிறேன்  அனைவரும் மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொள்ளவும்.











Saturday, July 28, 2012

குக்கர் சிக்கன் கிரேவி - COOKER CHICKEN GRAVY

தேவையான பொருட்கள் :


கோழிகறி  - 1/2 கிலோ
வெங்காயம் -3
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி பொடி - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2  ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பட்டை, கிராம்பு, மிளகு - சிறிதளவு
சோம்பு - 1டீஸ்பூன்
இஞ்சி , பூண்டு - நறுக்கியது சிறிது    
கலர் பொடி - சிறிது
பொட்டுகடலை மாவு - 1 டீஸ்பூன்  


செய்முறை:

முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்து வைக்கவும்.







வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை நடிவில் வகுந்து வைக்கவும். 





பின்னர் குக்கரில் சுத்தம் செய்த சிக்கன் ,  வெங்காயம்,  தக்காளி, பச்சைமிளகாய்,  மிளகாய் பொடி,  மல்லி பொடி,  மஞ்சள் பொடி, இஞ்சிபூண்டு விழுது, சிறிது கருவேப்பிலை,  உப்பு ,  1 ஸ்பூன்  எண்ணெய், மிளகு 10,  (பட்டை, கிராம்பு அரைத்து பொடியாகவும் சேர்க்கலாம்) பட்டை, கிராம்பு சிறிது  அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சிக்கனுடன் பிரட்டி 5 நிமிடம் ஊறவைக்கவும் .  

அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பிரட்டி விட்டு பின்னர் குக்கரை நன்றாக மூடி வைக்கவும். குக்கரில்  ஆவி வந்தவுடன் வெயிட்டை போடவும்.  பின்னர் மூன்று  விசில் வந்தவுடன் இறக்கிவிடலாம். இப்பொழுது கறியுடன் மசாலாக்கள் எல்லாம் சேர்ந்து  நன்றாக வெந்து இருக்கும் .


பின்னர் கடாயில் எண்ணெய்  ஊற்றி சூடான பிறகு சோம்பு, சிறிது மசாலா பொடி (பட்டை, கிராம்பு) , நறுக்கிய இஞ்சி பூண்டு ஆகியவைகளை சேர்த்து நன்றாக வதக்கவும். 





வதங்கிய பின் குக்கரில் இருக்கும் சிக்கனை அதில் சேர்க்கவும் , அதனுடன் சிறிது கலர் பொடியை சேர்த்து  நன்றாக பிரட்டி விடவும். வெந்த சிக்கனிலும் தண்ணீர் இருக்கும் .( தண்ணீர் நமக்கு தேவைபட்டால் சேர்த்துகொள்ளலாம் .) சிறிது நேரம் மூடி வைக்கவும். பிறகு  அதனுடன்  பொட்டுக்கடலை மாவை சேர்த்து பிரட்டிவிடவும் . பின்னர் தண்ணீர் சுண்டியவுடன் மல்லிதழையை தூவி அடுப்பை அணைக்கவும்...




இப்பொழுது குக்கர் சிக்கன் கிரேவி ரெடி. இதனை சாதம், சப்பாத்தி,
தோசை  ஆகியவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்... மிகவும் அருமையான சுவைமிகுந்த சிக்கன் கிரேவி ரெடி.

குறிப்பு: கிரேவியாக வேடுமென்றால் இப்படி தண்ணீர் சேர்த்து செய்து கொள்ளலாம் . வறுவலாக வேண்டும் என்றால் தண்ணீர் சேர்க்காமல் வறுத்து கொள்ளலாம்.சுவையான குக்கர் சிக்கன் வறுவல் கிடைக்கும்.

மருத்துவ பயன்கள்:  

  •  தூதுவலை இலையைப் பறித்து நன்றாக கழுவி தண்ணீர் வற்றும் வரை உலரவிடுங்கள். பின்னர் அந்த இலையை  எண்ணெய்யில் (அல்லது) நெய்யில் நன்றாக பொரித்து தினமும் 10 இலை சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை, இருமல், ஜலதோஷம்  இருப்பவர்களுக்கு நல்லது.  விரைவில் குணமடையும்.  

பழமொழி:

ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு 


உயர உயரப்  பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.


பதினாறும் பெற்றுப்  பெருவாழ்வு வாழ்க.

Monday, July 9, 2012

நெல்லிக்காய் மோர்குழம்பு - (GOOSEBERRY) NELLIKKAI MORE KUZHAMBU




தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் - 4
பச்சை மிளகாய் - 5
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
தயிர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - 1/2 மூடி
கடுகு - 1 டீஸ்பூன்
மோர் மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது 
எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு 

செய்முறை :

மிக எளிய முறை சத்துமிகுந்த நெல்லிக்காய் மோர் குழம்பு பற்றி பார்ப்போம் 


தேங்காயை துருவி கொண்டு , நெல்லிக்காயை விதை நீக்கி நறுக்கி எடுக்கவும் .




 
                   முதலில் தேங்காய், பச்சை மிளகாய், ஜீரகம், நறுக்கிய நெல்லிக்காய் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து எடுக்கவும்.




                  தயிரில் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கிவைக்கவும் . அதனுடன்  அரைத்த நெல்லிக்காய் தேங்காய் விழுதை சேர்த்து குழம்பு பக்குவத்திற்கு எடுத்துக்கொள்ளவும். 

                  கடாயில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்  கடுகு போடவும். பொரிந்ததும் மோர் மிளகாய் போட்டு , கறிவேப்பிலை சேர்த்து அதனுடன்   சிறிது பெருங்காய பொடி சேர்க்கவும். 

     பின் அதனுடன் ரெடியாக இருக்கும் நெல்லிக்காய் மோர் கரைசலை சேர்க்கவும். பின்பு அது நுரைத்து வரும்போதே இறக்கிவிடலாம் .
அதன்மேல் சிறிது கொத்தமல்லி தழையை போட்டு மூடிவிடவும்.
நெல்லிக்காய் மோர்குழம்பு ரெடி....


 

மோர்குழம்புடன்  உருளைக்கிளங்கு வறுவல், வாழைக்காய் வறுவல் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.....

குறிப்பு : 

மோர் குழம்பை கொதிக்கவிட வேண்டியது இல்லை .

மருத்துவ பயன்கள் : 


  • நெல்லிக்காயில் குளிர்ச்சி தன்மை உள்ளது . இது  உடல் வெப்பத்தை குறைக்கும் , முடி வளர்ச்சிக்கு உதவும்.                                                                                               
  •   உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் இதனை  ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். இது தவிர வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.
  • அஜீரண கோளாறு, மயக்கம், வாந்தி போன்றவைகளுக்கு நெல்லிக்காய்  மற்றும் மோர் உகந்தது குளிர்ச்சியானது . 
  • வெயில் காலத்துக்கு, நெல்லிக்காய், மோர்  இரண்டும் ஒரு நல்ல மருந்துகள்   என்று சொல்லலாம்.
  • ரத்த சோகைக்கு நெல்லிக்காய் நல்ல மருந்து.   
  •  கால்சியம் சத்து நிறைய  நெல்லிக்காயில் இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும்.        


  • நெல்லிக்காய் பல நோய்களையும் கட்டுபடுத்தும் குறிப்பாக மஞ்சள்காமாலை, நீரிழிவு .




Monday, July 2, 2012

முதல் விருது - FIRST AWARD


மகிழ்ச்சி செய்தி
எனக்கு கிடைத்த முதல் விருது  " AWESOME BLOGGER AWARD ".  இவ்விருதால்  நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதற்க்கு காரணம் என் அருமை உஷா  அக்கா அவர்கள் . எனக்கு விருது கொடுத்து என்னை உற்சாகப்படுத்திய அக்கா அவர்களுக்கு நான் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

உஷா ஸ்ரீகுமார் " http://ushasrikumar.blogspot.in/ " அக்கா நன்றி! நன்றி!!






நான் இவ்விருதை என்னுடைய உறவினர்கள்  உங்களுக்கு வழங்குகிறேன் .


1. இராஜராஜேஸ்வரி அக்கா http://jaghamani.blogspot.in/

2. நிரஞ்சனா http://nirusdreams.blogspot.com/

3. ஆசியா அக்கா http://www.asiyaomar.blogspot.in/

4. வை . கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள்  http://gopu1949.blogspot.in/

5. ராதா ராணி அக்கா http://radhaskitchen-1.blogspot.in/




 இதனை ஏற்று கொண்டவர்கள் பின்வரும் விதிமுறைகளை பின்பற்றவும்.
  1. விருதை வழங்குபவருக்கு நன்றி சொல்ல வேண்டும் 
  2. விருதை பெற்று கொண்டதன் அடையாளமாக அதன் சின்னத்தை உங்கள் பிளாக்கில்  பொறித்து கொள்ளலாம்
  3. உங்களுக்கு பிடித்த 5 பிளாகர்களுக்கு இந்த விருதை வழங்கலாம்


Saturday, June 16, 2012

பீட்ரூட் பால்கறி - BEET ROOT PAAL CURRY



தேவையான பொருட்கள் :
பீட்ரூட் - 100
தேங்காய் -1/2 மூடி துருவல் 
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் -3
மிகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
மஞ்சள் தூள்  - 1/2 டீஸ்பூன் 
கடுகு - 1 டீஸ்பூன் 
சோம்பு - 1/2 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - 1 இனுக்கு 


செய்முறை:

              தேங்காய் துருவலை பிழிந்து கட்டியான பால் எடுத்து வைக்கவும். 
பின் அத்துருவலை அரைத்து நன்றாக பிழிந்து  வடிகட்டி பால்
எடுத்துக்கொள்ளவும்.


              பீட்ரூட் ,வெங்காயம் , தக்காளி இவைகளை நறுக்கி வைக்கவும் . 
பச்சை  மிளகாயை வகுந்து கொள்ளவும் . மேலே குறிப்பிட்டுள்ள
அனைத்தையும்   தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.






             முதலில்  பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடான பின் கடுகு, சோம்பு போட்டு பொரிந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். 
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் , தக்காளி , கறிவேப்பிலை
சேர்த்து நன்றாக வதங்கிய பின் பீட்ரூட்டையும் சேர்த்து  வதக்கவும்.


            அதனுடன்  மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,மல்லித் தூள் ,உப்பு சேர்க்கவும். இப்பொழுது இரண்டாவதாக எடுத்து வைத்த தேங்காய் பாலை ஊற்றவும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக 
கொதிக்கவிடவும். பின் முதலில் எடுத்த பாலை ஊற்றி ஒருகொதி விட்டு இறக்கவும். இப்பொழுது பீட்ரூட் பால்கறி ரெடி.



குறிப்பு:

              பீட்ரூட் பால்கறியை சாதம் , பூரி , தோசை இவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம் .மிகவும் சுவையாக இருக்கும்.


மருத்துவ பயன்கள் :

  • பீட்ரூட்  அதி விரைவு ஜீரணத்தை  உண்டாக்கும் . மேனி அழகைக் கூட்டும்.
  • பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் அல்சர் குணமாகும்.
  • பீட்ரூட்  கஷாயம் இரத்தசோகையை தடுக்கும்.
  • தேங்காய்பால் நஞ்சு முறிவாக பயன்படுத்தப்படுகிறது.


Tuesday, May 29, 2012

கேரட் காளிபிளவர் தண்டு பொரியல் - CARROT CAULIFLOWER THANDU PORIYAL



தேவையான பொருட்கள்:

கேரட் - 100 கிராம் 
காளிபிளவர் தண்டு  - 100 கிராம் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன் 
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் 
சீரகத்  தூள்  - 1/2 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
உப்பு - தேவையான அளவு 
கடுகு - 1 டீஸ்பூன் 
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன் 
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் 

செய்முறை:


              முதலில் கேரட் , காளிபிளவர் தண்டு   இரண்டையும்  நன்றாக கழுவி பொடியாக நறுக்கிகொள்ளவும்.  வெங்காயத்தையும்  நறுக்கி வைக்கவும்.



               மேலே குறிப்பிட்ட தேவையான  பொருட்கள் அனைத்தையும்
 எடுத்துக்கொள்ளவும்.


              வானலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து  பொன்னிறமாகும் 
வரை வதக்கி அதனுடன் நறுக்கிய காளிபிளவர்  தண்டு  ,கேரட் 
சேர்த்து வதக்கவும். 
   

            அத்துடன் மேற்கூறிய மசாலாப்பொருட்களான மஞ்சள் தூள் , மிளகாய் தூள், மல்லித் தூள் , ஜீரகத் தூள் , உப்பு சேர்த்து பிரட்டிவிடவும்  அதனுடன் காய் வேகும் அளவிற்கு தண்ணீர்  சேர்த்து உப்பு சரிபார்த்து 
குறைந்த தீயில் நன்றாக வேகவிடவும் . பிரட்டி விடவும், தண்ணீர் சுண்டி 
காய்வெந்தபிறகு இறக்கி  வைத்துவிடவும். 
                   இப்பொழுது கேரட் காளிபிளவர் தண்டு பொரியல் ரெடி.





குறிப்பு: காளிபிளவர் தண்டு வேக கொஞ்சம் நேரமாகும் அதனால் 
சிறிது தண்ணீர் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.





மருத்துவ பயன்கள்:


  • கேரட்டில் வைட்டமின் 'எ'  இருப்பதால் உடலுக்கும் , கண்களுக்கும்  ரொம்ப நல்லது.
  • கேரட் இரத்தத்தை சுத்தப்படுத்தும் அதனால் உடலுக்கு புத்துணர்ச்சி (எனர்ஜி), மேனி பளபளப்பு  கூடும் .
  • கேரட்டிற்கு கொழுப்பை கரைக்கும் திறன் உண்டு . வயிற்று புண் வராமலும் தடுக்கும். 
  • காளிபிளவரில் வைட்டமின் 'இ' சத்து இருப்பதால் சிறுநீர்பை,  சிறுநீரகம்   போன்றவற்றில்  எவ்வித பாதிப்பும்  இல்லாமல் பாதுகாக்கும். 
  • திசுக்கள், நகம் வளர்ச்சிக்கும் காளிபிளவரில்  உள்ள வைட்டமின் 'இ' பயன்படுகிறது.


Wednesday, May 23, 2012

வெண்டைக்காய் பால்கறி - VENDAIKKAI ( LADY'S FINGER ) PAAL CURRY


தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் -150 கிராம் 
தேங்காய்        -  1/2 மூடி 
வெங்காயம் - 1
தக்காளி    -   1
பச்சை மிளகாய் - 2
உப்பு -  தேவையான அளவு 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் -  2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள்  -  1/2 டீஸ்பூன் 
கடுகு - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
எண்ணெய்   - 2 டேபிள்ஸ்பூன் 




செய்முறை:
    
                   வெண்டைக்காய் பால்கறி செய்வது பற்றி பார்ப்போம் .


                               


                        முதலில் வெண்டைக்காயை கழுவி வைக்கவும்.  ( தண்ணீருடன் நறுக்கினால் வழ  வழ  கொழ  கொழ வென வரும் ). 
ஆகையால்  காயிலுள்ள    தண்ணீர்  காய்ந்த பின் நறுக்கிகொள்ளவும். 
லேசாக ( 5 நிமிடம் ) வெண்டைக்காயை வதக்கி வைக்கவும். 




                       தேங்காயை துருவி அதை  முதலில் பிழிந்து கட்டியாக முதல்  
பால் எடுத்துக்கொள்ளவும் . பின்பு அந்த தேங்காய் துருவலை மிக்சியில் அரைத்து ( பிழிந்து )  இரண்டாம் பால் எடுத்துக்கொள்ளவும். மறுபடியும் 
அத்துருவலில்  தண்ணீர் தெளித்து பிழிந்து எடுக்கவும் மூன்றாம் பால் . 




                       
                      வெங்காயம் , தக்காளியை நறுக்கி,  பின் பச்சைமிளகாயை
நடுவில் கீரிகொண்டு  மேலே குறிப்பிட்ட  தேவையான  பொருட்கள் 
அனைத்தையும் தயாராக எடுத்துக்கொள்ளவும்.





                       கடாயில்  எண்ணெய் ஊற்றி கடுகு போடவும் பொரிந்ததும்  
பச்சை மிளகாய், வெங்காயம்  சேர்த்து வதக்கவும். பின் தக்காளி கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.


                      வதங்கியபின்பு வெண்டைக்காயை சேர்க்கவும் . அதனுடன் 
மிளகாய் தூள்,  மல்லி தூள்,   மஞ்சள் தூள், உப்பு சேர்த்து  பிரட்டிவிடவும் .
தேங்காய் பாலில் இரண்டாம் மற்றும்  மூன்றாம் பாலையும் அதனுடன்
ஊற்றி  உப்பு சரிபார்த்து மூடிவிடவும்.  நன்றாக கொதித்த பின்பு 
தனியாக வைத்திருக்கும்  தேங்காய் முதல் பாலை அதனுடன் சேர்த்து 
ஒரு கொதி வந்த பிறகு இறக்கிவிடவும்.
                                 சுவையான வெண்டைக்காய் பால்கறி ரெடி.



நான்   வெண்டைக்காய் பால்கறி  செய்து கருணைகிழங்கு வறுவல் 
செய்தேன்  சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருந்தது . அதனுடன் அப்பளமும் பொரித்து சாப்பிட்டோம் என்றால் 
மிக மிக சுவையாக இருக்கும் .





 குறிப்பு:  தேங்காய் பால் மூன்று விதமாக எடுக்க இயலாதவர்கள் 
முதலில் தேங்காயை பிழிந்து கட்டி பால் எடுக்கவும் . பின் அதனை 
அரைத்து நன்றாக வடித்து பால் எடுத்து வைக்கலாம் . 


மருத்துவ குறிப்புகள் :

  • தேங்காய் பால் வயிற்று புண்ணை  ஆற்றும் தண்மை கொண்டது.  
  • தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் ( Ulcer ) வயிற்றுப் புண்ணுக்கு  தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. இதில்  உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளதால்  இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது. 
  •  தேங்காயிலிருந்து எடுக்கப்படும்  எண்ணெய், தேங்காய் பால் போன்றவை அழகுப் பொருளாகவும், கூந்தலை பாதுகாக்கும் பொருளாகவும் விளங்குகிறது.
  •  உடல் வலிமைக்கு தேங்காய்ப் பால் நல்லது.
  •  நஞ்சு முறிவாகப் தேங்காய்ப் பால் பயன்படுத்தப்படுகிறது.




     

    Monday, May 21, 2012

    கக்கரிக்காய் பொரியல் - CUCUMBER PORIYAL

    தேவையான பொருட்கள் :

    கக்கரிக்காய்            -  100 கிராம் 
    வெங்காயம்             -  1
    மிளகாய் வற்றல்  -  2
    மஞ்சள் தூள்  -  1/2 டீஸ்பூன் 
    கடுகு   -  1 டீஸ்பூன் 
    உளுத்தம் பருப்பு   -  1 டீஸ்பூன் 
    கறிவேப்பிலை      -  சிறிது 
    உப்பு     -  தேவையான அளவு 
    தேங்காய் துருவல் -  1   டேபிள் டீஸ்பூன் 
    எண்ணெய்   - 2 டேபிள் டீஸ்பூன்


    செய்முறை:



    முதலில் கக்கரிக்காயை  கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம் நறுக்கி எடுக்கவும் . பின்பு தேவையான பொருட்கள் 
    அனைத்தையும் எடுத்து வைக்கவும்.




                      கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானபின் கடுகு
    உளுத்தம்பருப்பு சேர்த்து பொரிந்ததும் காய்ந்த மிளகாயை 
    கில்லி போடவும். பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். 
    கறிவேப்பிலை சேர்க்கவும். 

           அதனோடு கக்கரிக்காயை போட்டு தேவையான அளவு உப்பு,
    மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின் சிறிது நேரம் மூடிவைக்கவும்.


           அந்த  மூடியிலிருந்து வடியும் நீரே அது வேகுவதற்கு 
    போதுமானது. மூடியை எடுத்து விட்டு மறுபடியும் பிரட்டி விடவும் 
    இப்பொழு காய்  வெந்துள்ளதா என்று பார்க்கவும்.வெந்ததும் இறக்கி அதன் மேல் தேங்காய் துருவல்,கொத்தமல்லி இலையை தூவி பரிமாறலாம்.
          இப்பொழுது சுவையான கக்கரிக்காய்  பொரியல் ரெடி
       




    குறிப்பு:கக்கரிக்காய் தாளிக்கும் பொழுது 1 டேபிள்ஸ்பூன் கடலைபருப்பு 
    சேர்த்து கொண்டால் மிகவும் அருமையாக இருக்கும்.  கடலைபருப்பு
    சேர்த்துகொண்டால் சிறிது தண்ணீர் தெளித்து விடவும்.


    மருத்துவ பயன்கள் :

    •  கக்கரிக்காய் மிகவும் குளிர்ச்சி தண்மை  கொண்டது. நம் உடலின் வெப்பத்தை அது குறைக்கும். பொதுவாக வெயில்  காலங்களில் அதிகமாக நாம் உபயோகிக்க வேண்டும் . 
    •  வெங்காயத்தை உள்ளங் கை, கன்னங்கள், வயிறு, குதி கால் போன்ற இடங்களில் தடவிக்கொண்டால்  வெயிலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் வெப்பத் தாக்கிலிருந்து தப்ப விடலாம் .
    • வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம்.
    • வெங்காயத்தில் உள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் இரத்தத்தை கொழுப்பு இல்லாமல்  ஓடவைக்க உதவி செய்கிறது.